ஆசிரியர் பக்கம்

வணக்கம்
ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டிருக்கும் உங்களுக்கு எனதும் சக ஆசிரியர்களதும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வியானது வெறும் புத்தகக் கல்வியாக இருக்காது, மாணவர்களது ஆக்கற்திறனை வளர்ப்பதாக இருக்க வேண்டும் என்ற எனது எண்ணத்திற்கு இவ்வளவு அழகாக நீங்கள் உருவம் தந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. பெருமையாகவும் இருக்கிறது.
இந்த கல்வி ஆண்டு முடிவதற்குள் இன்னும் பல ஆக்கங்கள் இந்த பக்கங்களை அலங்கரிக்க வேண்டும். பேர்கன் அன்னை பூபதி பாடசாலையின் உயர்வகுப்பு மாணவர்களாகிய நீங்கள் இங்கு கல்வி பயிலும் மற்றைய கீழ் வகுப்பு மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும் என்பதே எமது விரும்பம்.
உங்கள் எழுத்துப் பணி தொடரட்டும்
அறிவால் உலகை வெல்வீர்கள் என்ற நம்பிக்கையோடு.. காத்திருக்கிறேன்.

மா.கேமச்சந்திரன்